வெள்ளி, 21 மே, 2010

போடுங்கம்மா, போடுங்கய்யா, போடுங்கண்ணா, போடுங்கக்கா..நிலைமை!!

அன்பு உள்ளங்களே!

கடந்த ஆண்டு இலங்கைக்குள்ளும், வெளிநாட்டிலும் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு சாக்காடான மிகக்கொடுமையான ஆண்டு. போரின்போதும், அதற்குப்பின்னரும் இலட்சக்கணக்கானோர் அல்லல்படுகின்றனர்.

- 82,000 மக்கள் – சிறார், சிறுமியர், பெண்டிர், முதியோர் – கொடும் முகாம்களில் அவதிப்படுகின்றனர்

- வீடு திரும்பியதாகச் சொல்லப்படும் மக்களோ இடிபாடுகளுக்கிடையிலும், வறுமையிலும் வாடுகிறார்கள்

- துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டபோதும், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் முற்றுப்பெறவில்லை.

- 10,000க்கும் அதிகமான ஊடுருவல்காரர்கள், குழந்தைப்போராளிகள் என்று சொல்லப்படுபவர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்

- உலக அரங்கில் சொல்லப்படுகிற, விளம்பரப்படுத்துவதைதவிர ஆளும் அரசு பாதிக்கப்பட்டோருக்கு நீதியையோ, வாழ வழிவகையோ செய்யவில்லை

உங்களுக்கு குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு. உடனடியாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் திரு. பான்_கி_மூன் அவர்களுக்கு அனுப்பும் கடித்திற்கு உங்கள் மின்னொப்பம் இட்டு ஆதரிக்கவும்

www.srilankacampaign.org/takeaction.htm

உண்மையான, நேர்மையான, உறுதியாக பலன் தரக்கூடிய போர்குற்றபுலனாய்வு மேற்கொள்ள ஐ.நா_வைக்கேட்டுக்கொள்ள ஆதரவளிக்க அனைத்து ஒத்த எண்ணமுடையோரை வேண்டுகிறோம்

இலங்கை அரசு உலகப்பொது எண்ணம் கொண்ட இயக்கங்களையும், நிறுவனங்களையும், அரசாங்கங்களையும் அமைதிப்படுத்தும் வகையில் தானே ஒரு ”விசாரணைக்குழு!” அமைத்துள்ளது. திரு. பான்_கி_மூன்: எந்த ஒரு இலங்கை ஆய்வும் இதுவரை நல்ல பலனளித்ததும் இல்லை என்பதை உணர்வதோடுமட்டுமல்லாமல், தினம்தோறும் மனித உரிமைகள் வெகு இலகுவாக மீறப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்

நீங்கள் மின்னொப்பம் இட்டதோடு நிற்காமல் இந்தவலைத்தகவலை உங்கள் மற்ற தொடர்பு முறைகளில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த இலங்கை அமைதி & நீதி கேட்கும் இயக்கம் நீதியையும், உரிமைகளையும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காகவும் இயங்கும் ஓர் அகில உலக இயக்கம்

களநிலவரங்கள் மிககவலையளிப்பதாக இருப்பினும், இந்த இயக்கம் சில முன்னேற்றங்களைக்கண்டுள்ளது: இலங்கையில் நடத்தப்பட்டுவரும் மனித உரிமைகளுக்கெதிரான செயல்களைக்கண்டிக்கும் செயல்வீரர்களை வலிமைப்படுத்துவதிலும், இலங்கையுடனான வர்த்தகத்தொடர்புகளைத்துண்டிக்க ஐரோப்பிய நாடுகளிடையே கருத்தை விதைப்பதிலும்

சிலமாதங்களுக்குமுன் நாம் நடத்திய இந்தப்பணியை மறுபடியும் மேலும் உத்வேகத்துடன் தொடர உங்கள் ஆதரவைக்கோருகிறோம்.

மேலும் தகவலறிய “www.srilankacampaign.org” முகவரிக்கு செல்லுங்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழனுக்குத்தோல்வியா…….? தொலைந்த தூக்கம்….?…..கவலை……?

 

Eyeதோல்வி

இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு முழுவதும் தமிழனைப்பற்றிய கவலையில் தொலைக்காட்சிப்பெட்டிமுன் அமர்ந்தேன்.

4 மணி நேரம் தொலைக்காட்சிப்பெட்டியில் அந்த நிகழ்வையே குடும்பத்துடன் கண்கொட்டக்கொட்டப்பார்த்திருந்தோம்.

“ஏன் இப்படி? எதனால் இப்படி? நம்மினத்திடம் என்ன குறை? திரும்பத்திரும்ப நமக்கு இப்படியே அடி விழுகிறதே?”

உதவிக்கு உலகநாடுகளில் இருந்தெல்லாம் மனிதர்கள் தோளோடு தோள் சேர்ந்து உதவி புரிந்தனர்.

ஆயினும் தமிழனின் தலையெழுத்து விட்டதா? எத்தனை பேர் (மக்கள் தொகை இருந்தாலும்), எத்தனை நாட்டில் இருந்தாலும், எத்தனை வீட்டில் இருந்தாலும், ஒற்றுமை இல்லையெனில் இது தான் முடிவோ?

அது உண்பதில் ஆகட்டும், உடுத்துவதில் ஆகட்டும், உழைப்பதில் ஆகட்டும் போரிடுவதில் ஆகட்டும். ஒற்றுமை தேவையல்லவா?

எங்கே இருக்கிறது?

கடைசி முடிவு… தொலைக்காட்சி பார்த்த கண்கள் சிவந்து, அடுத்த நாள் காலை எழ காலதாமதமாகி, அலுவலகம் தாமதமாகச்சென்று, மனம்வெம்பி…என்ன செய்வது…..

 

தமிழினம்

இதுதான் உன் இடமா? முன்னேறு.

thamizinam

உன் தலைவன் “தோனி”

உன் சகதோழன் “முரளீதரன்” – இலங்கை

மற்றும் சகாக்கள்

படேல், ரைனா, பாலாஜி - இந்தியா

ஹைடன் – ஆஸ்திரேலியா

தமிழகமே, தமிழினமே, ஏன் இந்தியாவே – உனக்காக விழித்திருக்கிறது…

வேலை வெட்டியில்லாத, நேரத்தை வீணடிக்கும் தமிழனுக்கு (எப்பப்பார்த்தாலும் ஈழம், மலேசியாவில் பரிதவிக்கும் மனிதன், இலங்கைக்கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவன்னு சொல்லிட்டு இருக்கிற இனத்தவனுக்கு)

இந்தப்பதிவு ஒரு கவைக்கும் உதவாது. நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு கீழேயுள்ள முகவரியைக்கிள்ளினால் கிட்டும்.

http://chinthani.blogspot.com/2010/04/blog-post_13.html

புதன், 31 மார்ச், 2010

தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம்…..உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறது…..

Sunrise

உதித்தது ஒரு விடிவெள்ளி.

Identity

தமிழனுக்கான ஒரு அடையாளம்.

Sword

உலகத்தமிழனுக்காக ஒரு போர்வாள்.

பகைவனைத்தான் கொல்லுமேயொழிய தலைவனை அல்ல.

இதனால் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் செய்தி யாதெனில், தமிழ்நாடு ஐடியா முன்னேற்றக்கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன் என்பதை பெருமையுடனும், ஆரவாரத்துடனும் தெரிவித்துக்கொள்ளக்கடமைப்பட்டுள்ளேன்.

அதற்கான கரை வேட்டியும், நாலைந்து தொண்டர் அடிப்பொடியார்களும், கொடியும், சின்னமும் இன்னும் சில பல தினங்களில் அறிவிக்கப்படும். கொள்கைகள் வகுக்கக்ப்பட்டுள்ளன. அவையாவும் இன்று இருப்பது போலவே இருக்கும் என்பதைத்தெரிவிக்க இயலாது. அன்மது கொள்கைகள் காலத்தின் கட்டாயத்தினால் மீறப்படலாம். மாற்றப்ப்படலாம் என்பதை வலியுறுத்துகிறேன்.

இப்போது இக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விருப்பமுள்ள அனைவரும் வந்து சேர்ந்து நமது தமிழினத்திற்குப் பெருமை சேர்க்குமாறு இறுமாப்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்குறிப்பு: இலவச தொலைக்காட்சிப்பெட்டி, பணமுடிப்பு, பிரியாணி இவைகள் வழங்கப்படுவதாக வரும் வதந்திகளி நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவை பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பதைப்போன்றதேயாகும்

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியைத்தட்டவும்

http://tnimk.blogspot.com/

புதன், 24 மார்ச், 2010

ஒரு நடிகையின் கதைக்கு ஞாநி போட்ட “ஓ”

SpitterGnani - "O' writerLeaking Pen

புவனேஸ்வரி விவகாரத்தில் வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது என்று பிரபல எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். சாமியார் நித்தியானந்தருடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் சங்கம் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தது. நடிகைகளை பாதுகாக்க சட்ட நடவடிக்கை தேவை, அதற்காக எவ்வளவு செலவானாலும் தருகிறேன், என்று சொன்ன சூர்யா உள்ளிட்ட நடிகர்கள், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல பயந்து ஓடி ஒழியும் சூழ்நிலை உருவாகி விட்டது. பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த சத்யராஜ், விவேக் உள்ளிட்டவர்களும் பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஞ்சிதா விவகாரம் குறித்து முதலில் கருத்து தெரிவித்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை, என்றார். அதன் பிறகு அளித்த பேட்டியொன்றில், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது. நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது, என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த மவுனத்தை பிரபல எழுத்தாளர் ஞாநி கண்டித்திருக்கிறார். ரஞ்சிதாவுக்கு கடிதம் என்ற பெயரில் பத்திரிகையொன்றில் அவர் எழுதியிருப்பதாவது:-
உங்களுடைய தனிநபர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்றன. நீங்கள் விரும்பும் ஆணுடன் உறவு கொள்வது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. தங்களை அது பாதித்தாலன்றி, அதில் தலையிடவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. வீடியோவில் உங்கள் முகத்தை மறைத்து வெளியிடுவதுதான் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும். ஏனென்றால் அம்பலப்படுத்தப்பட வேண்டிய ‌போலி நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.
புவனேஸ்வரி கைதின்போது வெறியாட்டம் ஆடிய நடிகர் சங்கமும், நடிக - நடிகைகளும் இப்போது உங்கள் விஷயத்தில் உரத்த மவுனம் சாதிப்பது வெட்கக் கேடானது. நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.
சாவித்ரி முதல் கனகா வரை நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகமும், வேதனையும் நிரம்பியதாகவே முடிகின்றன. உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வர வேண்டும். அதிலிருந்து வருங்கால நடிகைகள் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

http://cinema.dinamalar.com/tamil-news/1883/cinema/Kollywood/Nadigar-sangam`s-silence-:-Gnani.htm

இவ்வாறு ஞாநி எழுதியிருக்கிறார்.

நீங்கள் அருளிய, உதிர்த்த ஞாந வார்த்தைகள்…

”நீங்கள் ஒன்றும் விபசாரம் செய்ததாக அந்த வீடியோ சொல்லவில்லை. உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவு கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.”

இந்த இரண்டு வாசகங்களில் உங்கள் குடும்பத்தினரை வைத்து ஒரு படப்பதிவு செய்து, இது உங்களை விபச்சாரி என்று சொல்வதற்காக அல்ல. உங்கள் காமபராக்கிரமசாலியாக காண்பிப்பதற்கே என்று பறைசாற்றுங்கள் ஞானம் நிறையப்பெற்றோரே. கண்டிப்பாக அதை ஒளிபரப்பி இந்தப்பதிவில் இருப்பவர் பெயர் ஞா….ல் ஆரம்பித்து என்றும் 7.30, 8.00, 8.30க்கு முழுப்பெயரும் சொல்வார்கள்.

மேலும், குமுதமும், ரிப்போர்டரும், தினமலரும் உங்களுக்குப் பெரிய “ஓ” போடும்.

 

நாம் எல்லோரும் சேர்ந்து இந்த ஆளுக்கு ஒரு “ஓ” போட்டே ஆகவேண்டும்…

சனி, 13 மார்ச், 2010

கலைந்த கருத்து….

 

Arrow-Target

ஒரு மனமொத்த, ஆழமான, அழகான கலந்துரையாடலின் விளைவாக

ஒரு வீரியமான கருத்து உருவானது.

ஒரு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல், ஒரு துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட குண்டைப்போல் செல்லும் வழியில் தன்னைப்போலவே உடன் பயணித்தவைகளுடன் போராடி

இலக்கைச்சென்றடைந்தது கருத்து.

புரிதல் நிறைந்த, பேணிக்காக்கும், இயற்கையான, வளமான, சுகாதாரமான, புறத்தொல்லைகளற்ற சூழ்நிலையில்

வளர்ந்து, பெரிதானது அந்தக்கருத்து.

__________________________________________

Pollution

புகைவண்டிச்சத்தம். வீடு அதிர்கிறது. தூக்கம் கலைகிறது.

மின் துண்டிப்பு. வியர்வை பெருக்கிறது. தூக்கம் கெடுகிறது.

குடி நாறுகிறது. தலைவி அழுகிறது. தூக்கம் தொலைகிறது.

____________________________________________

Crying Child

சமீபத்தில் பிறந்த அந்தக்குழந்தை அழுகிறது!

வெள்ளி, 12 மார்ச், 2010

ஒரு நடிகையின் (குமுதம்) கதை…தொடர்கிறது…..விளக்கம்…? வேண்டுமா??

image

சபைநாகரிகம் கருதி இந்தவிளம்பரம் கீழ்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது.

நேற்றுவரை ஆன்மீகத்திற்காக வாய்ப்பு கொடுத்த வார இதழ் இன்று முதல் நீலப்பட வெளியீட்டாளராக மாறியுள்ள உயர்ந்த நிலையைக்கொண்டாடுங்கள்.

காரணம் இதுவாக இருக்குமோ…….???

image

வியாழன், 11 மார்ச், 2010

ஒரு நடிகையின் (குமுதம்) கதை….

 

இன்று…

ஒரு வார காலமாக தமிழ் மக்கள் அனைவரும் பரபரப்பாக பேசிகொண்டிருப்பது நித்தியானந்தர் விவகாரத்தை தான். பொது மக்களுக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சிதான் குமுதத்துக்கும்.
கடந்த சில வருடங்களாக நித்தியானந்தர் நமது இதழில் கட்டுரை தொடர் ஒன்று எழுதிவந்தார். குமுதம் என்றுமே புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரும் இதழ்.ஆன்மீக கருத்துக்களை எளிய நடையில் சொல்லும் ஒரு கட்டுரை தொடர் வெளியிட முடிவு செய்த போது நித்தியானந்தர் குறித்த தகவல்கள் கிடைத்தன.அவரும் குமுதத்தில் எழுத ஆர்வமாக இருந்தார் எழுதினார்.பெருவாரியான வாசகர்களுக்கு அவருடைய கருத்துக்கள் பிடித்திருந்தன.அந்த கருத்துக்களில் யாரும் குறை காண வில்லை.சென்ற வாரம் அந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வரை.
கோபம்,ஆத்திரம்,வெறுப்பு,ஏமாற்றம்,அதிர்ச்சி இவையெல்லாம் அந்த வீடியோவை பார்த்தபோது எல்லோருக்கும் வந்த உண்மையான உணர்வுகள் .
நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடிப்படை. எல்லாம் நல்ல விதமாய் நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் செயல்படுகிறோம்.ஆனால் அந்த நம்பிக்கை பொய்க்கும் வகையில் காட்சிகள் மாறும் போது?
நித்தியானந்தர் மீது பலமான குற்றசாட்டுகள் எழுப்ப பட்டிருக்கின்றன.அது உண்மையா,இல்லையா என்று அவருடைய ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் சர்ச்சை செய்கிறார்கள்.வழக்கு நீதி மன்றத்தை நோக்கி சென்றுருக்கிறது. இந்த சூழ்நிலையில் நித்தியானந்தரின் தொடரை வெளியிட குமுதம் விரும்பவில்லை. குமுதம் வாசகர்களாகிய நீங்களும் இதைத்தான் விரும்புவீர்களென்று  நம்புகிறோம்.

 

அன்று…

சில பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மிக முக்கியமான, தமிழ் கூறும் நல்லுலகிற்கு குமுதம் நிறுவனத்தாரிடம் இருந்து ஒரு அற்புதமான வழிகாட்டும் தொடர் வெளியிடப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், உலகமெங்கும் விற்பனையாகும் வார இதழ், உண்மையாகவே ஒரு வரலாற்றுத்தகவல்கள் நிறைந்த அந்தத் தொடரை வெளியிட்டுவந்தது.  மேலும் அது நிறையப்பேருக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாக இருந்தது. வெற்றியடைய பின்பற்றவேண்டிய நுண்மையான பல நுட்பங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எழுதப்பட்டிருந்தது. எல்லாத்தொடர்களிலும் வருவது போலவே அந்தத்தொடரில் கூட கதாபாத்திரங்களின் பெயர் இலை மறை காயாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குமுதம் வாங்கிய உடனே அனைத்து இளைஞர்களும், இளைஞிகளும் வாங்கிப்படித்த தொடர். படித்தவுடன் அத்தொடரில் பொதிந்திருக்கும் தகவல் (இலை மறை காயாக உள்ள பெயர்கள்) தன்னால் இனம்காண இயலவில்லையென்றால், உடனடியாக தனக்குத்தெரிந்த தகவல் களஞ்சிய நண்பர்களிடம் கேட்டு விடைபெற்றார்கள்.

இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பெரியோர்களும் விரும்பிப்படித்த ஒரு தொடர் அது.

அந்தத்தொடர் - “ஒரு நடிகையின் கதை”

இடையில் என்ன காரணமோ ஏதோ தெரியவில்லை சில கருங்காலிகளின் எதிர்ப்பினால் அந்தத்தொடர் நிறுத்தப்பட்டது. அத்தொடர் எழுதியவர் இப்போது கோவில் கோவிலாக சுற்றி, அதைப்பற்றிய பயணக்கட்டுரை எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகே….உனக்குப் பிடித்த வார இதழ்….கண்டிப்பாக நீ புரிந்துகொண்டேயாகவேண்டும்….

இன்றல்ல, அன்றல்ல, என்றுமே உனக்குப்பிடித்ததை மட்டுமே உனக்குக்கொடுக்கும் ஒரு வார இதழ்…படித்து அறிவை வளர்த்துக்கொள்…

புதன், 10 மார்ச், 2010

நான் கடவுள்…

  • வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை.

சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த திரையோவியங்களில் ஒன்று – நான் கடவுள். இப்படத்தைத் திரையரங்கில் 2 முறை பார்த்தேன். இரசித்தேன். கண்ணீர் மல்கினேன். இசையில் மயங்கினேன், மருவினேன். என் பார்வை மாறியது.

கடந்த வாரம் மீண்டும் இப்படத்தைப்பார்க்கவேண்டும். என் குழந்தைகளுடன் சேர்ந்து இரசிக்கவேண்டும் என்ற ஆவலால் அலைந்து திரிந்து மிகப்பிரபலமான ஒரு கடையில் தகடு வாங்கினேன். (நன்றி: MOSER BAER ரூ. 99/- ல் இரண்டு படம் – 5 பாடம்). எப்போதும் எந்தத்திரைப்படத்தகடு வாங்கினாலும், முதலில் என்னுடைய மடிக்கணனியில் ஒரு முறை பார்த்துவிட்டே அனைவருக்கும் முன் திரையிடுவது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் பார்த்தேன்.

பார்த்த எனக்கு முழுநீளத்திரைப்படங்கள் கொடுத்த படிப்பினையைக்காட்டிலும் கீழ் குறிப்பிட்டுள்ள மூன்று குறும்படங்கள் புரிய வைத்தன.

திரைப்படங்கள்:

LIFE, LOVE & HOPE

வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை

ஆங்கிலத்தலைப்புகளைத் தமிழ்படுத்திகொடுத்துள்ளேன். மிகவும் அருமை. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இளந்தளிர்களைப்பற்றிய விழிப்புணர்வு, அகன்றுணர்வு, தாயுணர்வைக்கொண்டு தந்திருக்கிறது இந்தக்குழு. அற்புதம். இந்தப் படங்களில் நடித்துள்ள அனைத்துக் குழந்தைகள், நடிகர்கள் – பிரசன்னா, இளவரசு மனதைக்கனக்கச்செய்தார்கள்.

இப்படிப்பட்ட படங்கள் எப்படியோ நான் படத்தகடு வாங்கியதால் தெரிய வந்தது. இல்லையென்றால் எப்படி எல்லோருக்கும் சென்றடையும். இவற்றைத்தான் எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் ஒளி/ஒலி பரப்பவேண்டும். இலவச மற்றும் காசு கொடுத்து தொலைக்காட்சிப்பெட்டி வாங்குபவர்கள் இல்லம் சென்றடையும்.

நிறைய வலைப்பதிவர்கள் விமர்சனம் எழுதிய படங்களைத்தயாரித்த ஒரு நிறுவனம் தான் இந்தப்படங்களையும் தயாரித்தது. சிறந்த இயக்குனர்கள் தான் இப்படங்களை இயக்கியது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள்:

மிச்கின், கிருத்திகா, சசிகுமார்,

இந்த ஆவணப்படங்கள் கடந்த 4 மாதங்களில் தமிழக நகரங்களின் திரையரங்குகளில் திரையிடப்பட்டனவாம்.

நல்ல முயற்சி. நல்ல துவக்கம். குழுவுக்குப் பாராட்டுக்கள்.

AIDS / HIV+ குழந்தைகள் பெரியோர்கள் மற்றும் எல்லோரையும் கண்டிப்பாக நாம் அனைவரும் புரிந்து கொண்டு நம்மால் இயன்ற உதவிகள் புரியவேண்டும். முக்கியமாக உதாசீனம் செய்வதை நிறுத்தவேண்டும்.

நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம்

எனக்கு வந்த மின்னஞ்சலின் நகல்.

கருத்து சத்தியமான உண்மை. ஒவ்வொரு மனிதனும் சுயதேடலில் இறங்கவேண்டிய தருணம். மயிரைப்பிடுங்கும் ஊடகங்களை இனம் கண்டு ஒதுக்கவேண்டிய நேரம். (இந்த மின்னஞ்சலை அனுப்பிய பூபதிக்கு நன்றி)

நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு..

காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன்.

வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள்.

உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம்.

நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தே இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய். ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும்.

ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?


என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.
என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.


பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன்

ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருக்குமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.


“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.


நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.
வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.


என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.


இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போது நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.


அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.
நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?
நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.


நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களின் வளங்களை இரசிக்கும், தனங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,

ரஞ்சிதா.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

தமிழன்.. பிச்சைக்காரனா? அல்லது ஆக்கப்படுகிறானா?

- பொட்டில் அறைந்த ஒரு தொடர்மின்னஞ்சலின் நகல். (நன்றி: வசந்த்ராஜ்)

BEG THAMIZHAN

PICHAI

நாளைய தமிழகம்??????????????

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

அக்கரை? பச்சை??

Bank_Othersideof the River USA-Flag

ஓரிரு ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. என் நேரம் நான் அமெரிக்காவில் (நான்கு சக்கர வண்டிகளைத்தயாரிக்கும் முக்கிய நகரான டெட்ரோய்ட்) இறங்கிய நாள் செப்டம்பர் 11 (அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் – இரட்டைகோபுரங்கள் வீழ்த்தப்பட்ட நாள். சில வருடம் கழித்து நமது பயணம்). விமான நிலையத்திலேயே தொல்லை ஆரம்பித்துவிட்டது. நமது திருவுருவமோ தாடியோடு. விமானத்தை விட்டு இறங்கி பணம் போட்டு (2 அமெரிக்க டாலர்) தள்ளுவண்டி எடுத்து என்னுடைய பெட்டிகளுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு வயதான மூதாட்டி ஆந்திராவில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் மகனைப்பார்க்க மூட்டை முடிச்சுகளுடன் இறங்கியிருந்தார். எப்படி தள்ளுவண்டியை எடுக்கவேண்டும், யாரிடம் கேட்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. ஏதோ மறுபடியும் எனது கடனட்டையைச் சுரண்டி அவர்களுக்கும் எடுத்துக்கொடுத்தேன் – சக மனிதர்களுக்கு உதவாவிட்டால் எப்படி. எனக்கு ஓரளவு தெலுங்கு தெரியுமாதலால் அந்தப்பாட்டி என்னைத்தவறாகவோ / ச்ந்தேகமாகவோ பார்க்காமல் பாசத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்புறம் வந்தது நம்ம நேரம். ஒலிபெருக்கியில் சில பேருடன் சேர்த்து என் பெயரும் அழைக்கப்பட்டது. 100 ரூபாய் செலவு செய்த தள்ளுவண்டியோடு என்னெவென்று கேட்கப்போனேன். சொன்னார்கள் என்னுடைய மூட்டை முடிச்சுகள் அனைத்தும் வேறு ஒரு நகரத்திற்கு (நியூயார்க்) கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என்று. எப்படி என்றால் பதில் நீங்கள் இலண்டனில் விமானம் மாறும்போது உங்களுடைய பொருட்கள் தவறுதலாக வேறு விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டது என்று. பிறகு விமானச்சேவை புரிபவர்களுக்குப் புரிய வைத்து ஒரு நாள் தங்கலுக்கான உறைவிடம்(5 நட்சத்திரம்), உடுக்கத்துணி, காலணி, உள்ளாடை அனைத்தையும் வாதாடி வாங்கிக்கொண்டேன். அடுத்தநாள் அனைத்தும் பத்திரமாக எனது அறைக்குவந்து சேர்ந்தது. ஆனாலும் அனைத்தும் முழுவதுமாக கலைக்கப்பட்டு, நன்றாக பரிசோதனை செய்யப்பட்டுஇருந்தது தெரிந்தது.

இந்தியாவில் எந்த ஒரு விமான நிலையத்திலும் தள்ளுவண்டிக்குப் பணம் கட்ட வேண்டியதில்லை. இந்தியா – ஏழை நாடு.

தள்ளுவண்டிக்கு பணம் வாங்கும் அமெரிக்கா – பணக்கார நாடு.

அக்கரை… பச்சை……? தொடரும்….

பின்குறிப்பு: நல்லவேளை இது ஒரு சாதாரண இந்தியக்குடிமகனுக்கு நடந்தது. இதுவே ஒரு சாருக்கான், கமலகாசன் போன்றோர்க்கு நடந்திருந்தால் நமது தொலைக்காட்சி அன்பர்களுக்கு வேலைப்பளு எவ்வளவு அதிகரித்திருக்கும். நமது செய்தித்தாள்களுக்கும் எவ்வளவு சிரமமாயிருந்திருக்கும். தப்பிக்கவைத்துவிட்டேன்.,