சனி, 17 மார்ச், 2012

தமிழனுக்கு தமிழனாக தோள் கொடுக்க தேவை பெருந்தன்மை..ஒற்றுமை..

ஏதாவது தெளிவு நம்மிடம் உண்டா? ஈழத்தமிழர் நலனில்?
அரசியல் ஒன்றர கலந்துள்ளது....அனைவரின் மனதில்...

இந்நாள் முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தால் பாராட்டுகிறோம்...
அவர் முன்னாள் சொன்ன "போரென்றால் மக்கள் இறப்பது சாதாரணம்" - வைகோ பொடாவில் கைது...இன்னும் மற்றவைகளை மறந்துவிட்டோம்.



ஆனால் முன்னாள் முதல்வர் காலம் தாழ்ந்து கருத்து உரைத்தாலும் உடனடியாக அவரை எதிர்த்தும் கிண்டலடித்தும் சிரிப்புசித்திரம் வரைவது, வசைபாடுவது..

ஒரு நாளும் இந்த மனிதர்கள் அந்த அம்மணியை கேவலமான வார்த்தையில் திட்டமுடியுமா ? வெட்டிப்போட்டுவிடும் உங்கள் கைகளை.../ வாழ்க்கையை..

தமிழன் என்ற ஒரே காரணத்தால் தான் இவரை வசை பாடுகிறீர்கள்..

கனடா ஈழத்தமிழ் இயக்க தலைவர் எவ்வளவு மன உண்மையோடு பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில் தமிழ் நாட்டு அரசியல் கலப்பின்றி ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் சேர்த்தே நன்றி பாராட்டியிருக்கிறார்.

நண்பர்களே எல்லோரும் ஒன்று படுவோம்..சொல்வது யாரென்று பாராமல் சொல்லப்படுவது என்ன என்று பார்த்து , அவை நாம் நம் மக்களுக்கு நன்மை பயக்குமெனில் கண்திறந்து பின்செல்வோம் அல்லத உடன் அழைத்து செல்வோம்...தமிழனின் வெற்றியை நோக்கி...ஒற்றுமையாக.... நான், நீ, அவன், அவள், அவர், இவர், இவன்..அனைவரும்...