வெள்ளி, 21 மே, 2010

போடுங்கம்மா, போடுங்கய்யா, போடுங்கண்ணா, போடுங்கக்கா..நிலைமை!!

அன்பு உள்ளங்களே!

கடந்த ஆண்டு இலங்கைக்குள்ளும், வெளிநாட்டிலும் வாழும் இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு சாக்காடான மிகக்கொடுமையான ஆண்டு. போரின்போதும், அதற்குப்பின்னரும் இலட்சக்கணக்கானோர் அல்லல்படுகின்றனர்.

- 82,000 மக்கள் – சிறார், சிறுமியர், பெண்டிர், முதியோர் – கொடும் முகாம்களில் அவதிப்படுகின்றனர்

- வீடு திரும்பியதாகச் சொல்லப்படும் மக்களோ இடிபாடுகளுக்கிடையிலும், வறுமையிலும் வாடுகிறார்கள்

- துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டபோதும், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் முற்றுப்பெறவில்லை.

- 10,000க்கும் அதிகமான ஊடுருவல்காரர்கள், குழந்தைப்போராளிகள் என்று சொல்லப்படுபவர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்

- உலக அரங்கில் சொல்லப்படுகிற, விளம்பரப்படுத்துவதைதவிர ஆளும் அரசு பாதிக்கப்பட்டோருக்கு நீதியையோ, வாழ வழிவகையோ செய்யவில்லை

உங்களுக்கு குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு. உடனடியாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் திரு. பான்_கி_மூன் அவர்களுக்கு அனுப்பும் கடித்திற்கு உங்கள் மின்னொப்பம் இட்டு ஆதரிக்கவும்

www.srilankacampaign.org/takeaction.htm

உண்மையான, நேர்மையான, உறுதியாக பலன் தரக்கூடிய போர்குற்றபுலனாய்வு மேற்கொள்ள ஐ.நா_வைக்கேட்டுக்கொள்ள ஆதரவளிக்க அனைத்து ஒத்த எண்ணமுடையோரை வேண்டுகிறோம்

இலங்கை அரசு உலகப்பொது எண்ணம் கொண்ட இயக்கங்களையும், நிறுவனங்களையும், அரசாங்கங்களையும் அமைதிப்படுத்தும் வகையில் தானே ஒரு ”விசாரணைக்குழு!” அமைத்துள்ளது. திரு. பான்_கி_மூன்: எந்த ஒரு இலங்கை ஆய்வும் இதுவரை நல்ல பலனளித்ததும் இல்லை என்பதை உணர்வதோடுமட்டுமல்லாமல், தினம்தோறும் மனித உரிமைகள் வெகு இலகுவாக மீறப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்

நீங்கள் மின்னொப்பம் இட்டதோடு நிற்காமல் இந்தவலைத்தகவலை உங்கள் மற்ற தொடர்பு முறைகளில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த இலங்கை அமைதி & நீதி கேட்கும் இயக்கம் நீதியையும், உரிமைகளையும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காகவும் இயங்கும் ஓர் அகில உலக இயக்கம்

களநிலவரங்கள் மிககவலையளிப்பதாக இருப்பினும், இந்த இயக்கம் சில முன்னேற்றங்களைக்கண்டுள்ளது: இலங்கையில் நடத்தப்பட்டுவரும் மனித உரிமைகளுக்கெதிரான செயல்களைக்கண்டிக்கும் செயல்வீரர்களை வலிமைப்படுத்துவதிலும், இலங்கையுடனான வர்த்தகத்தொடர்புகளைத்துண்டிக்க ஐரோப்பிய நாடுகளிடையே கருத்தை விதைப்பதிலும்

சிலமாதங்களுக்குமுன் நாம் நடத்திய இந்தப்பணியை மறுபடியும் மேலும் உத்வேகத்துடன் தொடர உங்கள் ஆதரவைக்கோருகிறோம்.

மேலும் தகவலறிய “www.srilankacampaign.org” முகவரிக்கு செல்லுங்கள்

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

காலையிலேயே மின்னஞ்சல் பெற்றேன்... அனுப்பியும் விட்டேன்.. நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்...

நன்றிகள்....

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பாலாஜி.

கருத்துரையிடுக