செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழனுக்குத்தோல்வியா…….? தொலைந்த தூக்கம்….?…..கவலை……?

 

Eyeதோல்வி

இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு முழுவதும் தமிழனைப்பற்றிய கவலையில் தொலைக்காட்சிப்பெட்டிமுன் அமர்ந்தேன்.

4 மணி நேரம் தொலைக்காட்சிப்பெட்டியில் அந்த நிகழ்வையே குடும்பத்துடன் கண்கொட்டக்கொட்டப்பார்த்திருந்தோம்.

“ஏன் இப்படி? எதனால் இப்படி? நம்மினத்திடம் என்ன குறை? திரும்பத்திரும்ப நமக்கு இப்படியே அடி விழுகிறதே?”

உதவிக்கு உலகநாடுகளில் இருந்தெல்லாம் மனிதர்கள் தோளோடு தோள் சேர்ந்து உதவி புரிந்தனர்.

ஆயினும் தமிழனின் தலையெழுத்து விட்டதா? எத்தனை பேர் (மக்கள் தொகை இருந்தாலும்), எத்தனை நாட்டில் இருந்தாலும், எத்தனை வீட்டில் இருந்தாலும், ஒற்றுமை இல்லையெனில் இது தான் முடிவோ?

அது உண்பதில் ஆகட்டும், உடுத்துவதில் ஆகட்டும், உழைப்பதில் ஆகட்டும் போரிடுவதில் ஆகட்டும். ஒற்றுமை தேவையல்லவா?

எங்கே இருக்கிறது?

கடைசி முடிவு… தொலைக்காட்சி பார்த்த கண்கள் சிவந்து, அடுத்த நாள் காலை எழ காலதாமதமாகி, அலுவலகம் தாமதமாகச்சென்று, மனம்வெம்பி…என்ன செய்வது…..

 

தமிழினம்

இதுதான் உன் இடமா? முன்னேறு.

thamizinam

உன் தலைவன் “தோனி”

உன் சகதோழன் “முரளீதரன்” – இலங்கை

மற்றும் சகாக்கள்

படேல், ரைனா, பாலாஜி - இந்தியா

ஹைடன் – ஆஸ்திரேலியா

தமிழகமே, தமிழினமே, ஏன் இந்தியாவே – உனக்காக விழித்திருக்கிறது…

வேலை வெட்டியில்லாத, நேரத்தை வீணடிக்கும் தமிழனுக்கு (எப்பப்பார்த்தாலும் ஈழம், மலேசியாவில் பரிதவிக்கும் மனிதன், இலங்கைக்கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவன்னு சொல்லிட்டு இருக்கிற இனத்தவனுக்கு)

இந்தப்பதிவு ஒரு கவைக்கும் உதவாது. நீங்கள் எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு கீழேயுள்ள முகவரியைக்கிள்ளினால் கிட்டும்.

http://chinthani.blogspot.com/2010/04/blog-post_13.html

3 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

என் பதிவை வழிமொழிந்தமைக்கு நன்றி முரளி!

அதனுடன் நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்!

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து சுமார் 8.30 முதல் 10மணிக்குள் வீடு வர்ம்போது டிவி ஷோரூம் வாசல்களில் கிரிக்கெட் பார்க்கும் பலரும் நல்ல இளம் வயதினர்கள், குறைந்த சம்பளக்காரர்கள், 40 டொ 55 வய்துக்காரர்கள். இந்தியா மாதிரி வளரும் 33ஆம் நாட்டில் மணித சக்தி இவ்வளவு கேவலமா வீணாவது கண்டா சந்தோஷம் தாங்கல.

Sadagopal Muralidharan சொன்னது…

//க. தங்கமணி பிரபு சொன்னது…
என் பதிவை வழிமொழிந்தமைக்கு நன்றி முரளி!

அதனுடன் நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்!

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து சுமார் 8.30 முதல் 10மணிக்குள் வீடு வர்ம்போது டிவி ஷோரூம் வாசல்களில் கிரிக்கெட் பார்க்கும் பலரும் நல்ல இளம் வயதினர்கள், குறைந்த சம்பளக்காரர்கள், 40 டொ 55 வய்துக்காரர்கள். இந்தியா மாதிரி வளரும் 33ஆம் நாட்டில் மணித சக்தி இவ்வளவு கேவலமா வீணாவது கண்டா சந்தோஷம் தாங்கல.//

அன்பு பிரபு,

தமிழ் வாழ்க. தமிழினத்தின் இனப்பற்று வாழ்க.

நன்றி.

Sadagopal Muralidharan சொன்னது…

//www.bogy.in சொன்னது…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in//

நன்றி. உங்கள் வருகைக்கு.

இந்தப்பின்னூட்டத்தின் வழியாக அனைவருக்கும் வாழ்த்துக்கூறியதில் மிக்க மகிழ்ச்சி.

கருத்துரையிடுக